search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாய சங்க கூட்டம்
    X

    விவசாய சங்க கூட்டம்

    • ஆர்.எஸ்.மங்கலத்தில் விவசாய சங்க கூட்டம் நடந்தது.
    • செயலாளர் ஆயங்குடி சரவணன், பொருளாளர் புரோஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் நீரினை பயன்படுத்து வோர் சங்க கூட்டம் தலைவர் சோழந்தூர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடை பெற்றது. செயலாளர் ஆயங்குடி சரவணன், பொருளாளர் புரோஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நீரினை பயன்ப டுத்துவோர் சங்க கூட்டம் மூன்று மாதத்துக்கு ஒரு முறை கூடி ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து மாவட்ட நிர்வாக கவனத்திற்கு எடுத்துச் செல்வது.

    2022-23ஆண்டில் பருவ மழை பொய்த்ததால் வைகை தண்ணீர் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்க்கு தண்ணி வராததால் இத னால் பாசனம் பெறும் 72 துணை கண்மாய்கள் நீர்வ ரத்து இல்லாமல் விவசாய முற்றிலும் பாதிக்கப்பட்ட தால் விவசாயிகளுக்கு இழப்பீடாக நிவாரண வழங்க வேண்டும் எனவும், மழைக்காலம் தொடங்கி இருப்பதால் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட அனைத்து கண் மாய்களின் வாரத்துக்கு கால்வாய்களை தூர்வார வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நிகழ்ச்சியில் துணைத் தலைவர்கள் உகந்தான்குடி ராமநாதன், நாகனேந்தல் விசுவநாதன், பாரனூர் சரவணன், துணைத் செய லாளர் பால்ராஜ், சிறு வண்டல் முருகானந்தம் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×