என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயிகள்- மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
- விவசாயிகள்- மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
- கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம்
மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புகளில் தெரிவித்ததாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை 17-ந்தேதி காலை 10.30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மீனவர்களின் குறைகேட்பு கூட்டம் நடத்தக் கோரி மீனவ பிரதிநிதிகளால் மாவட்ட கலெக்டரை கேட்டுக் கொண்டதினைத் தொடர்ந்து நாளை 17-ந் தேதி அன்று பிற்பகல் 3.30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட அரசுத்துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்துகொள்ள இருப்பதால், ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மீனவ மக்களும் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை பெற்றிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.






