என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
- கடலாடி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
- மாடுகளின் உரிமையாளர்களிடம் நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூர் கிராமத்தில் அரிய நாச்சி அம்மன் கோவில் திரு விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு பந்தயத்திற்கு 12 மைல் தூரமும், சின்ன மாடு பந்தயத்திற்கு 8 மைல் தூரமும் போட்டி நடந்தது. பெரிய மாடு மற்றும் சின்ன மாடு பந்தயத்தில் 33 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
இதில் பெரிய மாடு பந்தயத்தில் முதல் பரிசை விளாத்திகுளம் வீர ஜோதி என்பவரது மாடும், 2-வது பரிசை மதுரை மாவட்டம் திருப்பாலை விஷால் என்பவரது மாடும், 3-ம் பரிசை கே.வேப்பங்குளம் நல்லதேவர் என்பவரது மாடும், 4-ம் பரிசை சித்திரங்குடி ராமமூர்த்தி என்பவரது மாடும் வென்றது.
சின்ன மாடு பந்தயத்தில் முதல் பரிசை சுரேஷ்குமார் என்பவரது மாடும், 2-ம் பரிசை ராஜேந்திரன் என்பவரது மாடும், 3-ம் பரிசை பூலாங்கல் மந்திரமூர்த்தி என்பவரது மாடும், 4-ம் பரிசை மேலச் செல்வனூர் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி மாடும் பெற்றன.
மாடுகளின் உரிமை யாளர்களிடம் நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர். விழா ஏற்பாடு களை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்