என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏழைகளுக்கு ரம்ஜான் தொகுப்பு வழங்கல்
- ஏழைகளுக்கு ரம்ஜான் தொகுப்பு வழங்கப்பட்டது.
- பாம்பே டையிங் உரிமையாளர் ஜாபர் வரவேற்றார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் தாய்ப்பாசம் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் ஏழைகளுக்கு நோன்புப் பெருநாள் இலவச தொகுப்பு பொருட்கள் அருப்புக்கார தெரு ஜும்மா பள்ளிவாசலில் வழங்கப்படுவது வழக்கம்.
இந்தாண்டும் இந்த தொகுப்பில் புத்தாடை, மளிகை பொருட்கள், இறைச்சி,அரிசி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. பள்ளிவாசலின் தலைவர் லியாகத்அலி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஆர்.டி.ஓ. சேக் முகமது,தொழிலதிபர் தீன் சேம்பர் அப்துல் முனாப், சமூக ஆர்வலர் பல் மருத்துவர் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தொகுப்பு பொருட்களை வழங்கினர்.
பாம்பே டையிங் உரிமையாளர் ஜாபர் வரவேற்றார். இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளையின் நிறுவனர் பாதுஷா நூருல் ஷமது, பொருளாளர் ஸ்டார் சீனி முகமது ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story






