search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பத்திரபதிவு கட்டணம் குறைப்பு என்பது கண்துடைப்பு
    X

    தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் 

    பத்திரபதிவு கட்டணம் குறைப்பு என்பது கண்துடைப்பு

    • பத்திர பதிவு கட்டணம் குறைப்பு கண்துடைப்பு என்று ராமநாதபுரம் தொழில் வர்த்தக சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
    • இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பயனடைய போவதில்லை.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக பட்ஜெட்டில் பத்திர பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெறும் கண்துடைப்பு ஆகும். காரணம், சொத்துக்களின் வழிகாட்டு மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பயனடைய போவதில்லை. இந்த சலுகை உண்மையில் மக்களை சென்றடைய வேண்டும் என்று அரசு எண்ணியிருந்தால் வழிகாட்டு மதிப்பீட்டை உயர்த்தி இருக்கமாட்டார்கள். திராவிட கட்சிகளின் கை வந்த கலைகளில் இதுவும், இதுபோன்ற பலவும் உண்டு. மக்களை முட்டாளாக்கும் இத்தகைய முயற்சிகளை வாக்காளர்கள் அறிவார்கள் என்பதை காலம் நிச்சயம் உணர்த்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×