search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் அரசு விழாக்களை புறக்கணிக்க முடிவு
    X

    கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் அரசு விழாக்களை புறக்கணிக்க முடிவு

    • கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் அரசு விழாக்களை புறக்கணிக்க வருவாய் துறை அலுவலர்கள் முடிவு எடுத்துள்ளனர்.
    • அரசியல் பிரமுகர்கள் மன்னிப்பு கேட்கும் வரையில் விழாக்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் பழனிக்குமார் கூறியதாவது:-

    ராமநாதபுரத்தில் அமைச்சர் மற்றும் எம்.பி.க்கு இடையே நடந்த வாக்குவாதத்தில் அங்கு சமாதானம் செய்து கொண்டிருந்த மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன கீழே தள்ளி விடப்பட்டது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைய செய்தது. இதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் கட்சி சார்ந்த அரசு விழாவில் ராமநாதபுரம் மாவட்ட வருவாய்துறை அலுவலர்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என முடிவு செய்யப்பட்டது. மேலும் மாவட்ட கலெக்டரை அவமரியாதை செய்து கீழே தள்ளிய அரசியல் பிரமுகர்கள் மன்னிப்பு கேட்கும் வரையில் விழாக்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×