search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாதாள சாக்கடை பணிக்கு ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு
    X

    பாதாள சாக்கடை பணிக்கு ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு

    • ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை பணிக்கு ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • சாக்கடை குழாய்கள் பதித்து பல ஆண்டுகளாகிவிட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி யில் 33 வார்டுகளில் 2011 முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படு கிறது. பாதாள சாக்கடையின் மொத்த நீளம் 63.40 கி.மீ.உள்ளது. நகர் பகுதியில் சேகரிக்கப்படும் கழிவு நீரை வெளியேற்ற சிதம்பரம் பிள்ளை ஊருணி, சிங்காரத் தோப்பு, குண்டூருணி, நாக நாதபுரம், இந்திராநகர் ஆகிய 5 இடங்களில் கழிவு நீரை சேகரிக்க பம்பிங் நிலையங்கள் உள்ளன.

    இவற்றில் 4 இடங்களில் சேகரிக்கப்படும் கழிவு நீர் கடைசியாக இந்திரா நகர் பம்பிங் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, கழுவூரணி யில் சாலைக்குடியிருப்பு பகுதியில் செயல்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யத்திற்கு கொண்டு செல்லப் படுகிறது.

    நகர் பகுதியில் மொத்த முள்ள 1200 மென்ஹோல் களில் பலவற்றில் மண் மேடாகவும், குழாய்கள் சேத மடைந்தும், அடைப்புகள் காரணமாகவும் கழிவுநீர் தேங்குவதால் மக்கள் சிரமப் படுகின்றனர். இதையடுத்து புதிய குழாய்கள் மாற்றவும், புதிதாக பம்ப்பிங் மோட்டார் கள், பேட்டரிகள் வாங்கவும் ரூ.11 கோடி நிதி ஒதுக்கப் பட்டு இதற்கான டெண்டர் நடக்கிறது.இதுகுறித்து நகராட்சி பொறியாளர் ரெங்கராஜன் கூறுகையில் ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை குழாய்கள் பதித்து பல ஆண்டுகளாகிவிட்டது. கழிவுநீர் மட்டுமின்றி மழை நீரும் புகுந்து விடுவதால் மென்ஹோல்கள் நிரம்பி பிரச்சினை ஏற்படுகிறது. நிரந்தரமாக பிரச்சினை உள்ள இடங்களை கண்டறிந் துள்ளோம். அவற்றை ரோபோ இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடக்கிறது. புதிதாக குழாய் மாற்றுவதற் கும், பம்பிங் நிலையங்களில் புதிய பேட்டரிகள், மோட் டார் வாங்கி மேம்படுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது என்றார்.

    Next Story
    ×