search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தில் நிதி ஒதுக்கீடு
    X

    ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தில் நிதி ஒதுக்கீடு

    • ராமநாதபுரத்தில் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறுகுறு விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களிடம் இருக்கின்ற இயற்கை வளங் களை மேம்படுத்தி உரிய முறையில் வளங்களை பயன்படுத்திடவும், பயிர் சாகுபடி முறையில் அதிக பட்ச உற்பத்திக்கான நுட்பங் களை பயன்படுத்தவும், பண்ணைக்கழிவுகளை உற்பத்தி நோக்கங்களுக்காக மறுசுழற்சி செய்திடவும், காலநிலை மற்றும் சமூக பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு பால், கோழி, தேனீ வளர்ப்பு போன்ற கலவையான செயல்பாடுகள் மூலமாக ஆண்டு முழுவதும் நிலையான வருமானம் கிடைக்க வழி செய்கிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான மானாவாரி பகுதி வளர்ச்சிக்கான துணை இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய அமைப்பு 300 எக்டர், நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தபடவுள்ளது. இத்திட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் அனைத்து வட்டாரங்களிலும் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பயனாளியாக இணைக்கப்படுவர். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவ சாயிகள் குறைந்தது ஒரு எக்டர் நில உரிமை உடைய வராக இருக்க வேண்டும்.

    மேலும் தனது சொந்த செலவில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் வேளாண்மை இனங்களான பயிர் செயல் விளக்கத்திடல், மண் புழு உரத்தொட்டி மற்றும் கால் நடை இனங்களான ஒரு கறவை மாடு அல்லது 10 ஆடுகள் மற்றும் தோட்டக் கலை இனங்களான பழ மரக்கன்றுகள், தேனீ வளர்ப்பு பெட்டி போன்ற வற்றை திட்ட வழிகாட்டு தலின்படி அமைக்க வேண் டும். இவ்வாறு ரூ.60 ஆயிரம் மதிப்பிதல் ஒருங்கிணைந்த பண்ணையத்தினை உருவாக்கிய விவசாயிக்கு பினனேற்பு மானியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். எனவே அனைத்து வட்டார விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்கு நர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

    மேலும் இத்திட்டத்தில் தமிழக அரசின் சிறப்பினமாக இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும்

    சிறுகுறு சான்று வைத்துள்ள ஆதிதிராவிட மற்றும் விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் சிறப்பு மானியம் எக்டருக்கு ரூ.12 ஆயிரத்து டன் சேர்த்து மொத்தம் எக்டருக்கு ரூ.42 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

    ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறுகுறு விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×