என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை
    X

    தொண்டியில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை

    • ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சி மன்றக் கூட்டம் பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். வார்டு கவுன்சிலர் கள் கலந்து கொண்டு தங்க ளது பகுதியில் செயல்படுத்த வேண்டிய பணிகள் பற்றி பேசினர்.

    அதில், தொண்டி பேரூராட்சிக்குட்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் குடிநீர் விநியோ கிப்பதை கண்காணிக்க காமிரா பொருத்த வேண்டும். மேலத்தெருவில் உள்ள தரைமட்டத் தொட்டியை சுற்றி கல்லுக்கால் ஊன்றி வேலி அமைக்க வேண்டும்.

    பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து தெருக்களிலும் ஸ்பீடு நெட் நிறுவனம் மூலம் பைபர் நெட் வயர் கொண்டு செல்ல கம்பங்கள் நடுவதற்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொண்டியில் உள்ள மணிமுத்தாறு பாலம் அருகில் போக்குவரத்து நெரிசலினால் ஏற்படும் விபத்தை தடுக்க பொது மக்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் அருகி லேயே புதிய நடைமேடை அமைக்க வேண்டும். பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே அதனை அகற்ற தாசில்தார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×