என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் ராஜீவ் காந்தியின் நினைவுதினம் அனுசரிப்பு
    X

    ஓசூரில் ராஜீவ் காந்தியின் நினைவுதினம் அனுசரிப்பு

    • மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
    • கட்சியினர் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி, ஓசூர் எம்.ஜி.ரோட்டில் உள்ள காந்தி சிலை அருகிலும், மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கி, ராஜீவ் காந்தி படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அவரது தலைமையில் கட்சியினர் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.

    இதில், மாவட்ட பொருளாளர் மாதேஷ் என்ற மகாதேவன், மாநகர தலைவர் தியாகராஜன், , மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி சரோஜா, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×