search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை வேளச்சேரி பகுதியில் மழைநீர் அகற்றும் பணி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    சென்னை வேளச்சேரி பகுதியில் மழைநீர் அகற்றும் பணி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

    • சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை, தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது.
    • அடாத மழையிலும் விடாது பணியாற்றும் உள்ளாட்சி பணியாளர்களுக்கு நன்றி.

    வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட தமிழகம் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்றும் அடை மழை நீடித்தது. இந்நிலையில் வேளச்சேரி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மழைநீர் அகற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி நடைபெறும் பணிகள் குறித்து அப்போது விளக்கம் அளித்தார்.


    தொடர்ந்து தமது டுவிட்டர் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது: மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருப்பவர்கள் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களே, சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை, தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அரசை வாழ்த்துகிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் இப்பணியாளர்களின் இடைவிடாத பணியே.

    அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்த நான் வேளச்சேரி கல்கி நகர் பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டுத் தெரிவித்தேன். இவர்கள் மகத்தான பணி அனைவராலும் பாராட்டத்தக்கது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×