என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் சிற்பக்கூடங்களில் மழைநீர் புகுந்தது: சிற்பம் செதுக்கும் பணிகள் பாதிப்பு
- நேற்று இரவில் துவங்கிய கன மழை இன்று காலை வரை விடாமல் பெய்தது.
- பக்கிங்காம் கால்வாயில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி வரையான நிலவரப்படி மாவட்ட அளவில் மாமல்லபுரத்தில் அதிகளவில் மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் மொத்தம் மழை அளவு 165.6 செ.மீ,, மாமல்லபுரத்தில் மட்டும் 45செ.மீ மழை பெய்துள்ளது.
நேற்று இரவில் துவங்கிய கன மழை இன்று காலை வரை விடாமல் பெய்து வந்தது. இதனால் தாழ்வான பகுதியில் இருக்கும் சிற்பக்கூடங்களில் மழைநீர் வெள்ளம் போல் புகுந்தது. இதனால் சிற்பங்கள் செதுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டது.
பக்கிங்காம் கால்வாயில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கரையோரம் குடியிருப்போர், சிற்பக்கூடம் வைத்திப்போர், இறால் பண்ணை தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வருவாய்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள்.
Next Story






