என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் அடிபட்டு ரெயில்வே ஊழியர் சாவு
    X

    ரெயிலில் அடிபட்டு ரெயில்வே ஊழியர் சாவு

    • தண்டவாளத்தில் பலத்த காயமடைந்து இறந்து கிடந்தார்.
    • ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பெல்ராம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது43). ரெயில்வே கேட் கீப்பரான இவர் வட்டகானம்பட்டி ரெயில்வே கேட் பகுதியில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் இவர் நேற்று இரவு வட்டகானம்பட்டி-செங்கோடம்பட்டி இடையே உள்ள தண்டவாளத்தில் பலத்த காயமடைந்து இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி ரெயில்வே போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெகதீசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீசன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×