என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராகு, கேது பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாக பூஜைகள்.
நத்தம் கைலாசநாதர் கோவிலில் ராகு கேது பூஜை
- நேற்று மாலை 3.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீனம் ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் மாறினார்.
- நட்சத்திர பரிகார அபிஷேகம் மற்றும் ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி, ராகு, கேது பகவானுக்கு மகா தீபாராதனைகள் நடந்தது.
நத்தம்:
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. இதில் நேற்று மாலை 3.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீனம் ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் மாறினார்.
இதையொட்டி நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோவிலில் உள்ள ராகு, கேது, பகவானுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நட்சத்திர பரிகார அபிஷேகம் மற்றும் ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி, ராகு, கேது பகவானுக்கு மகா தீபாராதனைகள் நடந்தது.
இதில் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






