என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கல்குவாரி லாரிகள் இயங்க மீண்டும் மக்கள் எதிர்ப்பு
- வருவாய்த்துறை அதிகாரிகள் கொரட்டகிரி கிராமம் வழியாக கல்குவாரி டிப்பர் லாரிகளை இயக்கினர்.
- 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கொரட்டகிரி கிராமத்தில் 6 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன
இந்த கல்குவாரிகளில் இருந்து ஜல்லிகற்கள் மற்றும் எம்.சாண்ட் ஆகிய கட்டுமான பொருட்களை ஏற்றி கொண்டு செல்ல பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவா ர்த்தையை அடுத்து பொது மக்கள் போரா ட்டத்தை கைவிட்டனர்.
அதனைத்தொடர்ந்து கல்குவாரி உரிமையாளர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அவர்களின் மனுவை விசாரித்த நீதிமன்றம் கொரட்டகிரி கிராமத்தின் வழியாக சாலையில் டிப்பர் லாரிகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பி ரண்டு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என கூறி இருந்தது.
இதையடுத்து நேற்று தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, குமரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கொரட்டகிரி கிராமம் வழியாக கல்குவாரி டிப்பர் லாரிகளை இயக்கினர்.
அப்போது கிராமத்தின் வழியாக சென்ற டிப்பர் லாரிகளை பொதுமக்கள் வழிமறித்தனர்.
இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் சென்னை உயர்நீதிமன்ற ஆணையை காட்டி டிப்பர் லாரிகளை இயக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கூறினர்.
ஆனால் பொதுமக்கள் லாரிகள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதி வழியாக டிப்பர் லாரிகள் செல்லாமல் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. இன்று 2-வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பொதும க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் இந்த போராட்டத்தால் கொரட்டகிரி கிராமத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்