search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் கடைகளில் தரமான அரிசி-பொதுமக்கள் வலியுறுத்தல்
    X

    ரேஷன் கடைகளில் தரமான அரிசி-பொதுமக்கள் வலியுறுத்தல்

    • நியாய விலைக்கடைகளில் தரமற்ற அரிசி, பருப்பு விநியோகம் செய்யப்படுகிறது.
    • நியாய விலைக் கடைகளில் தரமான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காளம்பாளையத்தைச் சோ்ந்த ஜீவானந்தம் என்பவா் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூரை அடுத்த பொங்குபாளையம் பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் தரமற்ற அரிசி, பருப்பு விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு விநியோகிக்கப்படும் அரிசியில் துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆகவே, பொங்குபாளையம் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் தரமான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×