search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் காசநோய் தொற்றாளர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
    X

    காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை டாக்டர்கள் வழங்கினர்.

    ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் காசநோய் தொற்றாளர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

    • காசநோய் ஒழிப்பு மற்றும் தொற்றாளர் நலக் கூட்டமைப்பு சார்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய காசநோய் தொற்றாளர்களுக்கு ஊட்டச்சத்து நல உதவிகள் வழங்கப்பட்டது.
    • 11 பொருட்கள் உள்ளடக்கிய ஊட்டச்சத்து நல உதவிப் பெட்டகத்தை 15-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி யில் காசநோய் ஒழிப்பு மற்றும் தொற்றாளர் நலக் கூட்டமைப்பு சார்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய காசநோய் தொற்றாளர்களுக்கு ஊட்டச்சத்து நல உதவிகள் வழங்கப்பட்டது.

    திண்டுக்கல் தலைமை மருத்துவமனை துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர் ராமச்சந்திரன் தலைமையேற்று கருத்துரை யாற்றினார். நம்பிக்கை மைய ஆற்றுநர் கண்ணன் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில், ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரி முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் அரவிந்த் நாராயணன், தலைமை செவிலியர் லெட்சுமி, அறக்கட்டளை திட்ட உதவியாளர் சுரேஷ்கு மார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    துணை இயக்குனர் மற்றும் சிறப்பு அழை ப்பாளர்கள், சுண்டல், பாசி பயிறு, முட்டை, நிலக்கடலை பருப்பு உட்பட 11 பொரு ட்கள் உள்ளடக்கிய ஊட்டச்சத்து நல உதவிப் பெட்டகத்தை 15-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினர். உணவே மருந்தெனும் தலைப்பில் வனம் நேச்சுரல்ஸ் பிரதீப்கு மார், ஆரோக்கியம் தரும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விழிப்புணர்வு கருத்துரையாற்றினார்.

    ஆத்தூர் அரசு மருத்துவ மனை தொற்று நோய் பிரிவு சார்பாக, செவிலியர் நித்யா மற்றும் சரண்யா ஆகியோர் பயனாளிகளுக்கு ஊட்ட ச்சத்து சிற்றுண்டியை வழங்கினர். காசநோய் பிரிவிலிருந்து கார்த்திகா, ஜாக்குலின் மேரி ஆகியோர் கலந்துகொண்டனர். காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பாண்டியராஜன் நன்றியுரை யாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை காசநோய் ஒழிப்பு மற்றும் தொற்றாளர் நலக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் செய்திருந்தார்.

    பாரத பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காசநோய் பிரிவு 2025-க்குள் காசநோய் இல்லாத இந்தியா என்ற இலக்கை நோக்கிப் பல்நோக்குப் பணிகளை செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசும் சீரிய முனைப்போடு காசநோய் இல்லாத தமிழகம் 2025 என்ற இலக்கை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறது. இதற்கு வலு சேர்க்கும் முனைப்பில் இக்கூட்டமைப்பு தொடர்ச்சி யாக ஊட்டச்சத்து நல உதவிகளை வழங்கி காச நோயாளிகளின் உடல்நலம் மற்றும் சமூக நலம் பேணி வருவது குறிப்பிடத்தக்க செயலாகும்.

    Next Story
    ×