என் மலர்
உள்ளூர் செய்திகள்

புளியம்பட்டி ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடம் - திறப்பு விழா
- புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தது.
- ஊராட்சி செயலாளர் கவிதா, மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள புளியம்பட்டி ஊராட்சியில், ரூ.19 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. இதனையடுத்து ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உத்தமராஜ் தலைமை வகித்தார். இந்த விழாவில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, தி.மு.க.பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜேஷ் குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன்,ஊராட்சி செயலாளர் கவிதா, மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






