என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆவணத்தான்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
    X

    ஆவணத்தான்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

    உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டுஆவணத்தான்கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், ஆவணத்தான்கோட்டை கிராம ஊராட்சியில், உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா கலந்துகொண்டார்.

    மேலும் இந்த கிராம சபைக் கூட்டத்தில்,சிறப்பாக பணிபுரிந்த தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில்,சமுதாய முதலீட்டு நிதியின்கீழ், பயனாளிகளுக்கு கடனுதவிகளையும் மற்றும் தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறையின் சார்பில்,மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு மா,பலா,நெல்லி உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    பின்னர்,மாவட்ட கலெக்டர்,அறந்தாங்கி வட்டாரம், ஆவணத்தான்கோட்டை மேற்கு குழந்தைகள் மையத்தில் பயிலும் குழந்தைகளின் கற்றல், கற்பித்தல் திறன்கள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .இம்மையத்தில் குழந்தைகளுக்கான இருப்பிட வசதி,கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் இம்மையத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்நிகழ்வுகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன்,உதவி இயக்குநர் இளங்கோ தாயுமானவன்,துணை இயக்குநர் நமச்சிவாயம்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமாரவேலன், இந்திராகாந்தி, ஊராட்சிமன்றத் தலைவர் ஜெயமணி கருணாநிதி,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×