search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள்
    X

    நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள்

    புதுக்கோட்டை மாவட்டத்தில்நாளை மின்சாரம் நிறுத்தும் இடங்கள்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட்டும், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கனக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, நடையக்குடி, லேணாவிலக்கு எல்லைப்பட்டி, செல்லுக்குடி, பெருஞ்சுனை ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    கீரமங்கலம், ஆவணத்தான்கோட்டை துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே கீரமங்கலம், மேற்பனைக்காடு, சேந்தன்குடி, குளமங்கலம், வேம்பங்குடி, கொடிக்கரம்பை, காசிம்புதுப்பேட்டை, எல்.என்.புரம், செரியலூர், பனங்குளம், நகரம், ஆவணத்தான்கோட்டை, ராஜேந்திரபுரம், பெரியாளூர், குளமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கோட்டைப்பட்டினம், மணமேல்குடி, கட்டுமாவடி, திருப்புனவாசல், மீமிசல், ஆவுடையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என்று அறந்தாங்கி உதவி செயற்பொறியாளர் லூர்து சகாயராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×