என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு
    X

    சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு
    • பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் லால்குடி எம்.எல்.ஏ., சவுந்திரபாண்டியன் தலைமையில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா முன்னிலையில் நடைபெற்றது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் ஆய்வுக் கூட்டம், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவர் லால்குடி எம்.எல்.ஏ., சவுந்திரபாண்டியன் தலைமையில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில், பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர்களும், எம்.எல்.ஏ.க்களுமான மணப்பாறை அப்துல்சமது, உடுமலைப்பேட்டை உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி கடம்பூர் ராஜு, திருவாடணை இராம.கருமாணிக்கம், செங்கம் மு.பெ.கிரி, பாப்பிரெட்டிபட்டி கோவிந்தசாமி, வாசுதேவநல்லூர் டாக்டர். தி.சதன் திருமலைக்குமார், கந்தர்வக்கோட்டை சின்னதுரை, திருவாரூர் பூண்டி கலைவாணன், விராலிமலை டாக்டர் விஜயபாஸ்கார் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 19 பயனாளிகளுக்கு ரூ.1.78 லட்சம் மதிப்பீலான திருமண உதவி தொகைகளையும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 41 பயனாளிகளுக்கு ரூ.9.20 லட்சம் மதிப்பிலான இயற்கை மரண நிவாரண உதவித் தொகைகளையும், தாட்கோ மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.19.36 லட்சம் மதிப்பிலான மானிய உதவித்தொகை மூலம் வாகனங்களையும், 7 தூய்மை பணியாளார்களுக்கு ரூ.56.63 லட்சம் மதிப்பீட்டில், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது.

    முன்னதாக, புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நகர் பணிமனையில், ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் பேருந்து இயக்கம், பேருந்து சீரமைக்கும் பணிகள் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மகளிர் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட மகளிர் இலவச பேருந்து பயணத்திட்டம் குறித்தும், அதன் மூலம் நாள் தோறும் பயன்பெற்றுவரும் மகளிரின் எண்ணிக்கை குறித்தும் விரிவாக கேட்டறிந்தனர். அதனைதொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் மாணவிகள் விடுதியினை பார்வையிட்டு, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் விடுதியில் உள்ளனவா என்பது குறித்தும், தினந்தோறும் விடுதியில் வழங்கப்படும் உணவு வகைகள் குறித்தும், மாணவியர்களிடம் கேட்டறிந்தனர். அதனைதொடர்ந்து புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் ஆவின் பால் உற்பத்தி நிறுவனத்தினை பார்வையிட்ட குழுவினர் நாள்தோறும் கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு குறித்தும், விற்பனை மற்றும் விநியோகம் குறித்தும், துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.

    புதுக்கோட்டை சிப்காட் பகுதியினை பார்வையிட்ட குழுவினர் அங்கு 7.76 பரப்பளவில் சுமார் 3786 மரங்கன்றுகள் நடப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் பசுமை பூங்காவினை பார்வையிட்டு அதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும், சிப்காட் பகுதி முழுவதும் மரக்கன்றுகளை அதிக அளவு நடுவதற்கும், நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். அதனைதொடர்ந்து அன்னவாசல் பகுதியில், மின்சாரம் விநியோகம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின் நிலையத்தினை பார்வையிட்டு, மின் விநியோகம் குறித்தும், பயன்பெறும் கிராமங்களின் எண்ணிக்கையை கேட்டறிந்தனர். இந்நிகழ்வுகளில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர்செல்வி உள்ளிட்ட அரசுத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×