என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாடு உதைத்து வாலிபர் பலி
- மாடு உதைத்து வாலிபர் பலியானார்
- பால் கறக்கும்போது நடந்த சம்பவம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சத்திரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (வயது38).கூலித் தொழிலாளியான இவர், தான் வளர்க்கும் மாட்டில் பால் கறக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மாடு உதைந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த செல்வமணியை உறவினர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செல்வமணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பால் எடுக்கச் சென்று மாடு உதைத்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






