search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள தினமும் ஒரு மணி நேரம் புத்தகம் வாசிக்க வேண்டும்
    X

    அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள தினமும் ஒரு மணி நேரம் புத்தகம் வாசிக்க வேண்டும்

    • அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள தினமும் ஒரு மணி நேரம் புத்தகம் வாசிக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
    • புதுக்கோட்டையில் புத்தக திருவிழா தொடக்கம்

    புதுக்கோட்டை:

    மாணவர்கள் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள நாள்தோறும் குறைந்தது ஒரு மணி நேரமாவது புத்தகம் வாசிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

    புதுக்கோட்டையில் 5-வது புத்தக திருவிழா கோலாகலமாக தொடங்கி யது. இதை மாநில சட்டத்து றை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

    புதுக்கோட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 5-வது புத்தகத் திருவிழா நகர்மன்ற வளாகத்தில் தொடங்கியது. இக்கண்காட்சி வருகிற ஆகஸ்ட் 7-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    100 அரங்குகளில் ஆயி ரக்கணக்கான தலைப்பு களில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் வானியல் நிகழ்வுகளை கண்முன்னே நிறுத்தும் வகையிலான கோளர ங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. அரசின் பல்வேறு துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

    பின்னர் புத்தகம் வாங்குவதற்கு முதல் கட்டமாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கி அவர் பேசியதாவது :-

    புதுக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அகிலன், அழ.வள்ளியப்பா ஆகியோரது நூற்றாண்டு விழாவின் போது புத்தகத் திருவிழா நடத்தப்படுவது பாராட்டுதலுக்கு உரியது. கொரோனா பரவலால்2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு எழுச்சியுடன் இத்திருவிழா நடைபெறுகிறது. தன்னுடைய சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொள்ள புத்தக வாசிப்பு முக்கியமானது.

    நினைவாற்றல், அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள புத்தக வாசிப்பு அவசியமானது. படித்ததை ஆழமாக பதிய வைத்துக் கொண்டால் தான் எதிர்காலத்துக்கு நல்லது. எனவே மாணவர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது புத்தகம் வாசிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்றார்.

    விழாவில் கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை, நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜி.கருப்பசாமி, கோட்டாட்சியர் (பொறுப்பு) கருணாகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×