என் மலர்
உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடி அருகே சரக்கு லாரி மோதி தொழிலாளி பலி
- கறம்பக்குடி அருகே சரக்கு லாரி மோதி தொழிலாளி பலியானார்
- மகேந்திரன் சரக்கு லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சேவுகன் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 40). கூலித் தொழிலாளியான இவர் சரக்கு வேனில் சிமெண்ட் மற்றும் கற்களை ஏற்றி விட்டு அதன் பின்னால் தனது மோட்டார் சைக்கிளில் கல்லாக் கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். மருதன்கோன் விடுதி அருகே சென்றபோது சரக்கு வேனை முந்த முயன்றார் அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு வேன்மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மகேந்திரன் சரக்கு லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதைபார்த்த அப்பகுதி பொதுமக்கள் மகேந்திரனை மீட்டு அருகில் உள்ள ரெகுநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மகேந்திரன் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கறம்பக்குடி போலீசார் சரக்கு லாரி டிரைவர் கருப்பபக்கோண் தெருவை சேர்ந்த ரகுநாதன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






