search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வீட்டிற்குள் இருந்த பெண்ைண வெளியே அழைத்து 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
    X

    வீட்டிற்குள் இருந்த பெண்ைண வெளியே அழைத்து 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

    • வீட்டிற்குள் இருந்த பெண்ைண வெளியே அழைத்து 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
    • முகவரி கேட்பதுபோல் நடித்து

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மச்சுவாடி ராம்நகர் 3-வது தெருவில் வசிப்பவர் பிரவீன்குமார். அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி வித்யா (வயது33).

    பிரவீன்குமார் காலையில் வேலைக்கு சென்றால், பள்ளி முடிந்து மாலையில்தான் வீடுதிரும்புவார். வித்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் 2 பேர், வித்யா வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து, உள்ளே இருந்த வித்யாவை அழைத்துள்ளனர். வெளியில் வந்த அவர், நீங்கள் யார், எதற்காக இங்கு வந்தீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மர்ம நபர்கள் ஒரு பேப்பரில் எழுதியுள்ள முகவரியை காட்டி இது எங்குள்ளது என்று கேட்டுள்ளர்.

    அந்த பேப்பரை வாங்கி முகவரியை படித்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த மர்மநபர்கள், வித்யாவின் கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு, கண் இமைக்கும் நேரத்தில் வாகனத்தில் ஏறி சிட்டாக பறந்தனர். இச்சம்பவம் குறித்து வித்யா கொடுத்த புகாரின் பேரில், கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    இதுபோன்ற செயல்கள் நகரின் பல பகுதிகளில் நடைபெறுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்தேகப்படும்படி யாரையாவது பார்த்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலைத்தில் தகவல் கொடுக்க வேண்டும். விரைவில் மர்ம நபர்களை பிடித்துவிடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×