search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு- கலெக்டர் தகவல்
    X

    அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு- கலெக்டர் தகவல்

    • அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • ஜல்ஜீவன் திட்டத்தில் வழங்கப்படும்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள ெசய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    ஜல் ஜீவன் மிஷன் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டமாகும்.

    ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு ஒருநபருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டர் வீதம் பாதுகாப்பான தூய குடிநீர் வழங்கி, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதை 2024 ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்து தன்னிறைவு பெற்ற மாவட்டமாக அறிவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டிற்கு 146 கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட 579 குக்கிராமங்களில் குடிநீர்குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கென சமூக பங்களிப்பாக ரூ.5.006 கோடி வசூல் செய்ய வேண்டியுள்ளது. ஜல் ஜீவன் மிஷன் 2022 - 23 ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் 45 ஊராட்சிகளுக்குட்பட்ட 81 குக்கிராமங்களில் குடிநீர் குழாய் இணைப்பு பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கென மொத்த மதிப்பீட்டில் சமூக பங்களிப்பாக ரூ.1.09 கோடி மதிப்பில் பெற வேண்டியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட குக்கிராமங்களில் வசித்துவரும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பங்களிப்பினை அந்தந்த கிராம ஊராட்சிமன்ற அலுவலகத்தில் செலுத்திட தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் பொதுமக்களிடம் சமூக பங்களிப்பு பெறுவது தொடர்பாக சம்மந்தப்பட்ட ஊராட்சிகளிலுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் போன்ற அமைப்புகள் பங்கெடுத்து பொதுமக்களிடமிருந்து சமூக பங்களிப்பு பெறுவதற்கான உரிய விழிப்புணர்வை ஏற்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×