என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் கால்நடை மருத்துவ முகாம்
- ஆலங்குடியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது
- சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கல்லாலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் மலர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் கால்நடைகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டு நோய் தொற்று இன்றி கால் நடைகளை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்த விவசாயிகளுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இம்முகாமில் ஆலங்குடி உதவி மருத்துவர் பரமேஸ்வரி மற்றும் ஆய்வாளர் ஆனந்தன், ஆலங்குடி கால்நடை உதவியாளர் ரெங்கசாமி மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story






