என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவை முன்னிட்டு குரும்பூர்கோவில்பட்டியில் வடமஞ்சுவிரட்டு போட்டி
- கோவில் திருவிழாவை முன்னிட்டு குரும்பூர்கோவில்பட்டியில் வடமஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது
- ஒரு காளைக்கு 9 வீரர்கள் என 25 நிமிடங்கள் ஒவ்வொரு போட்டியும் நடைபெற்றது
அறந்தாங்கி,
அறந்தாங்கி தாலுகா குரும்பூர்கோவில்பட்டி கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு வடமஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை , தஞ்சை, சிவகங்கை, மதுரை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 13 காளைகள் பங்கேற்றன. அதே போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 117 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளனரா என மருத்துவர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஒரு காளைக்கு 9 வீரர்கள் என 25 நிமிடங்கள் ஒவ்வொரு போட்டியும் நடைபெற்றது. போட்டியில் வீரர்கள் காளைகளை அடக்கியும், காளைகள் வீரர்களிடமிருந்து தப்பித்ததும் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்ச்சாகத்தை ஏற்படுத்தியது.மொத்தம் 13 காளைகளில் பெரும்பாலான காளைகள் வீரர்களிடம் சிக்காததால், காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும் ரொக்கப்பணம், கட்டில், அண்டா உள்ளிட்ட நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆரவரத்துடன் கண்டு ரசித்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






