என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் தவறி விழுந்த வாலிபர் பலி
- ஆலங்குடியில் தவறி விழுந்த வாலிபர் பலியானார்
- இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள கூழையன்காட்டைச் சேர்ந்த மனோகரன் மகன் சரவணன் ( வயது 40 ). டிரைவராக உள்ளார். இவருக்கு 6-வயது மற்றும் 1-வயது என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் வீட்டின் அருகில் கால் தடுமாறி கீழே விழுந்ததில் முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்காக மருத்துவ கல்லூரி பிணவறையில் அவரது உடல் வைக்கப்பட்டது. இது குறித்து அவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 35) கொடுத்த புகாரின் பேரில், ஆலங்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்.






