search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாய் இறந்த  சோகத்தில் மகனும் உயிரிழப்பு
    X

    தாய் இறந்த சோகத்தில் மகனும் உயிரிழப்பு

    • தாய் இறந்த சோகத்தில் மகனும் உயிரிழந்தார்
    • பழனியப்பன் இதய சிகிச்சை எடுத்து வந்தார்.

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள பி.உசிலம்பட்டியில் வசித்து வந்தவர் மருதம்பாள் என்ற சின்னபிள்ளை (வயது 90). இவரது மகன் பழனியப்பன்(52). சம்பவத்தன்று சின்னப்பிள்ளை வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இவரது இறுதிசடங்கிற்கான ஏற்பாடுகளை பழனியப்பன் செய்து வந்தார். மேலும் தாய் இறந்த சோகத்தில் மனமுடைந்த நிலையில் அவர் இருந்து வந்தார். இந்நிலையில் பழனியப்பனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். பழனியப்பன் இதய சிகிச்சை எடுத்து வந்தார் என்பது குறுப்பிடத்தக்கது. இதையடுத்து தாய்-மகனுக்கும் இடுகாட்டில் அடுத்தடுத்து இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது. ஒரே குடும்பத்தில் தாய் இறந்த சோகத்தில் மகனும் ெநஞ்சு வலியால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறந்த பழனியப்பனுக்கு ஒரு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.


    Next Story
    ×