search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைவிடப்பட்ட தொழிலாளர்கள் சங்க போராட்டம்
    X

    கைவிடப்பட்ட தொழிலாளர்கள் சங்க போராட்டம்

    • தொழிலாளர்கள் சங்க போராட்டம் கைவிடப்பட்டது
    • அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை தொடர்ந்து

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், பொது செயலாளர் முகமதுஅலிஜின்னா முன்னிலை வகித்தார்.

    அப்போது ஊராட்சியில் வேலை செய்யும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மோட்டார் ஆப்பரேட்டர்கள் மற்றும் தூய்மைப்ப ணியாளர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படியை அமுல்படுத்த வேண்டும். 7- வது ஊதியக்குழு ஊதியம் மற்றும் ஊதிய நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி மூலம் ஊதியம் நேரடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    போராட்டத்தினை தொடர்ந்து துறை அதிகாரிகள் உரிய பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்ததையடுத்து தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தில் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மோட்டார் ஆப்பரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×