search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புனித பாத்திமா மாதா தேர்பவனி
    X

    புனித பாத்திமா மாதா தேர்பவனி

    • புனித பாத்திமா மாதா தேர்பவனி நடைபெற்றது.
    • வான வேடிக்கைகளுடன் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள புனித பாத்திமா மாதா தேவாலய தேர் திரு விழா நேற்று நடைபெற்றது. திருவிழா கடந்த பத்தாம் தேதி கொடியே ற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து அன்று முதல் கிராம பொது மக்களால் தினந்தோறும் மண்டகப்படிகார்கல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. அரசடிப்பட்டி அருட்திரு பங்கு தந்தை பபியான் தலைமையில் சிறப்பு நவநாள் பூஜையும் ஆராதனையும் நடைபெற்று வந்தன.

    9 ஆம் நாள் இரவு கிராம பொது மக்க ளால் மேளதாளத்துடன் வான வெடிகள் முழங்க தேர்த்திரு விழா நடைபெற்றது. திருவிழாவிற்கு முன்னாள் பங்குதந்தை சவேரியார், அரசடிப்பட்டி பங்குத்தந்தை பாபியான் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×