search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை கீரை.தமிழ்ச்செல்வன் கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் தினவிழா
    X

    புதுக்கோட்டை கீரை.தமிழ்ச்செல்வன் கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் தினவிழா

    • புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் கீரை. தமிழ்ச்செல்வன் கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
    • காவேரி நகர் அரசினர் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் சி.வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் கீரை. தமிழ்ச்செல்வன் கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் செவிலியர் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவி ஆர்.விசித்ரா வரவேற்றார். கீரை.தமிழ்ச்செல்வன் கல்வி நிறுவனங்களின் தலைவர் கீரை.தமிழ்ராஜா தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.பீட்டர் முன்னிலை வகித்தார்.

    காவேரி நகர் அரசினர் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் சி.வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசுகையில், இன்றைய மாணவிகள் எதிர்காலத்தில் சிறந்து விளங்க வேண்டுமெனவும், திறமை மிக்கவர்களாகவும், தேசப்பற்று உள்ளவர்களாகவும், மேதைகளாகவும், அறிஞர்களாகவும், வல்லுநர்களாகவும் உருவாகிட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

    விழாவில் செவிலியர் கல்லூரி முதல்வர் வி.எஸ்.நிர்மலா ஆசிரியர் தின வாழ்த்துகளை கூறி வாழ்த்துரை வழங்கினார். விழாவையொட்டி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா நிகழ்ச்சிகளை கல்வியியல் கல்லூரி தமிழ் விரிவுரையாளர் பி.தீபா தொகுத்து வழங்கினார். நிறைவில் செவிலியர் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவி ஆர்.காயத்ரி நன்றி கூறினார்.

    Next Story
    ×