search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் சர்வதேச பள்ளியில் ஆசிரியர் தினவிழா
    X

    புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் சர்வதேச பள்ளியில் ஆசிரியர் தினவிழா

    • டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் ஆசிரியர்களின் பணியை பாராட்டும் விதமாக மாணவ, மாணவிகளால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
    • இந்நிகழ்வுக்கு பள்ளியின் தலைவர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன் தலைமை தாங்கினார்.

    புதுக்கோட்டை :

    டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் ஆசிரியர்களின் பணியை பாராட்டும் விதமாக மாணவ, மாணவிகளால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    இந்நிகழ்வுக்கு பள்ளியின் தலைவர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் டாக்டர் ஜலஜா குமாரி முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைவர் ஜோனத்தன் ஜெயபரதன் பேசுகையில், ஆசிரியர் பணி என்பது தன்னலம் இல்லாத தியாகப்பணி, ஒவ்வொருவரும் நமது இரண்டாம் பெற்றோர்களாம் ஆசிரியர்களுக்கு நன்றியுள்ளவர்களாக செயல்பட வேண்டும்.

    முதல் பெண் ஆசிரியையாகிய சாவித்திரி பாய் பூலேவை போல ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தமது பணியை அறப்பணியாக்கி செயல்பட்டு வருகின்றனர் என்று பேசினார்.

    அதனைத் தொடர்ந்து கவிதை,பேச்சு, நாடகம், நடனம், பாடல் என்று பல கோணங்களில் ஆசிரியர்களை வாழ்த்தும் விதமாக மழலையார் பிரிவு முதல் மேல்நிலைப் பிரிவு வரை அனைத்து மாணவ மாணவிகளாலும் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். விழா நிறைவில் பள்ளி முதல்வர் நன்றி கூறினார்.

    Next Story
    ×