என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி அருகே கலை நிகழ்ச்சிகள் நடத்துவதில் இருதரப்பினர் திடீர் மோதல்
- கலைநிகழ்ச்சி தொடர்பாக இரு தரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
- இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டதில் இருவர் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்பட்டியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் நடைபெற்ற கலைநிகழ்ச்சி தொடர்பாக இரு தரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று வம்பன் கடை வீதியில் இரண்டு தரப்பினரும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் இரு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டதில் இருவர் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த மோதலில் ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள 4.5 பவுன் தங்க செயின் ஒன்று காணாமல் போனதாகவும், 5000 மதிப்புள்ள இருசக்க ர வாகனத்தின் முன் விளக்கை சேதப்படுத்தியதாகவும் கூறி விஜயகுமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் கொத்தக்கோட்டையைச் சேர்ந்த கண்ணன், பாப்பான்பட்டியைச் சேர்ந்த துரையரசன், சுதாகர், செல்லத்துரை, விக்னேஷ்வரன் ஆகிய 5 பேர் மீதும்,
மற்றொரு தரப்பினரான கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் பாப் பான்பட்டியைச் சேர்ந்த விஜயகுமார், முகிலன், சந்தோஷ், அகிலன், சிவா ஆகிய 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோதலில் கண்ணன் மற்றும் துரையரசன் ஆகியோர் காயங்களோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.






