search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலி ரெயில் டிக்கெட்டுகள் அச்சிட்டு விற்பனை
    X

    போலி ரெயில் டிக்கெட்டுகள் அச்சிட்டு விற்பனை

    • போலி ரெயில் டிக்கெட்டுகள் அச்சிட்டு விற்பனை செய்யப்பட்டது
    • 4 பிரிவுகளின் கீழ் தட்சிணாமூர்த்தி மீது வழக்கு பதிவு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை திருவரங்குளம் மெயின் வீதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 42). இவர் புதுக்கோட்டையில் மேலராஜவீதியில் சங்கரா என்ற பெயரில் கமப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைனில் போலியாக ரெயில் டிக்கெட் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    8 பயணிகளுக்கு திருச்சியிலிருந்து சென்னை செல்லவும், சென்னையிலிருந்து திருப்பதி செல்லவும் டிக்கட் வழங்கியுள்ளார்.

    இதையடுத்து ஏமாற்றப்பட்ட ரெயில் பயணிகள் ரெயில்வே பாதுகாப்பு படையினர் உதவியை நாடினர்.

    அதை தொடர்ந்து மதுரை ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த மண்டல பாதுகாப்பு ஆணையர் அன்பரசு கொடுத்த புகாரின்பேரில் புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் 4 பிரிவுகளின் கீழ் தட்சிணாமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார். இவர் மீது ஏற்கனவே 2020ல் மதுரையில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது.

    Next Story
    ×