என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களிடமிருந்து 469 மனுக்களை பெற்ற கலெக்டர்
    X

    பொதுமக்களிடமிருந்து 469 மனுக்களை பெற்ற கலெக்டர்

    • பொதுமக்களிடமிருந்து 469 மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்
    • குறைதீர்நாள் கூட்டம்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் முதியர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 469 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர் மாவட்ட ஆட்சியரகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீரமரபினர் நலவிடுதிகளில் 2021-2022 ஆம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறந்த விடுதிகளாக தேர்வு செய்யப்பட்ட 3 விடுதி காப்பாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழ், பரிசுத் தொகை மற்றும் கேடயங்களை வழங்கினார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், உதவி ஆணையர் (கலால்) எம்.மாரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலரகள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×