என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம்
    X

    புதுக்கோட்டையில் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம்

    • புதுக்கோட்டையில் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது
    • எம்.பி.க்கள், கலெக்டர் பங்கேற்றனர்

    புதுக்கோட்டை:

    பொதுமக்களின் வாழ்வா தார மேம்பாட்டிற்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசின் மூலமாக பல்வேறு திட்டங்கள் வேளாண்மைத்துறை, தொழில்துறை, தாட்கோ, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டங்களின் முழு பயன்பாட்டையும் பொது மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயலாற்றும் வகையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    . மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், எம்பி.க்கள் எம்.எம்.அப்து ல்லா, பொள்ளாச்சி கு.சண்மு கசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குனர் ரேவதி, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், மாவட்ட மேலாளர் (தாட்கோ) முத்துரெத்தினம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், உதவி பொதுமேலாளர் (நபார்டு) எஸ்.ஜெயஸ்ரீ மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.





    Next Story
    ×