search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் கொரோனா சிகிச்சைக்கான ஒத்திகை
    X

    புதுக்கோட்டையில் கொரோனா சிகிச்சைக்கான ஒத்திகை

    • கலெக்டர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டார்
    • 181 மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளதாக தகவல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகைப் பயிற்சியினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் தெரிவித்ததாவது:-தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகைப் பயிற்சி நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 லட்சத்து 12 ஆயிரத்து 207 முதல் தவணை தடுப்பூசிகளும், 13 லட்சத்து 78 ஆயிரத்து 358 இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் மற்றும் 1 லட்சம் 86 ஆயிரத்து 461 முன்னெச்சரிக்கை நடவடிக்கை தடுப்பூசிகள் என மொத்தம் 29 லட்சத்து 77 ஆயிரத்து 26 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.மேலும் கோவிட் தொற்று சிகிச்சை அளிக்க ஏதுவாக, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதி இல்லாத 125 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியுடன் 290 படுக்கைகளும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 85 படுக்கைகளும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதி இல்லாத 326 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியுடன் 94 படுக்கைகளும் மற்றும் தனியார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதி இல்லாத 121 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியுடன் 149 படுக்கைகளும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 50 படுக்கைகளும் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்ஸிஜன் வசதி இல்லாத 364 படுக்கைகளும், ஆக்ஸிஜன் வசதியுடன் 26 படுக்கைகளும் என மொத்தம் 1,630 படுக்கை வசதிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு 1,800 பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் 4,664 ஆர்.டி.பி.சி.ஆர் உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    2023 நடப்பாண்டில் 23 நபர்களுக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டதில் 15 நபர்கள் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 8 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா சிகிச்சை மேற்கொள்வதற்காக 181 மருத்துவர்களும், 285 செவிலியர்களும், 12 மருத்துவ உதவியாளர்களும், வெண்டிலேட்டர் பயிற்சி பெற்ற 40 நபர்களும் மற்றும் 110 வெண்டிலேட்டர்களும், 23 ஆக்ஸிமீட்டர் கருவிகளும், 148 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள், 549 ஆக்ஸிஜன் உருளைகளும், திரவ ஆக்ஸிஜன் 4 கொள்கலன்களும் தயா ர்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 21,023 எண்ணிக்கையிலான கவச உடைகளும், 6,326 எண்ணிக்கையிலான 95 முகக்கவசங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

    பேட்டியின் போது அரசு மருத்துவக்கல்லூரி டீன் பூவதி, இணை இயக்குநர் ராதிகா, இருக்கை மருத்துவர் இந்திராணி, துணை இயக்குநர் ராம்கணேஷ், வட்டாட்சியர் விஜயலெட்சுமி பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×