search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்தர்வகோட்டையில் ஆதவற்ற விதவைகளுக்கு வெள்ளாடு வழங்கும் விழா
    X

    கந்தர்வகோட்டையில் ஆதவற்ற விதவைகளுக்கு வெள்ளாடு வழங்கும் விழா

    • ஆதரவற்ற விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கால்நடை துறை சார்பில் வெள்ளாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • விழாவில் 100 பயனாளிகளுக்கு தலா ரூ.17,500 மதிப்புள்ள 5 வெள்ளாடுகள் ஒவ்வொரு பயனாளிக்கும் வழங்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட கால்நடை துறை சார்பில் வெள்ளாடுகள் வழங்கும் விழா புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

    விழாவில் 100 பயனாளிகளுக்கு தலா ரூ.17,500 மதிப்புள்ள 5 வெள்ளாடுகள் ஒவ்வொரு பயனாளிக்கும் வழங்கப்பட்டது.

    விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை கலந்து கொண்டு பயனாளிகளுக்கு முழு மானியத்தில் வெள்ளாடுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை ஒன்றிய குழு தலைவர் கார்த்திக், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் ஐயா, நகரச் செயலாளர் ராஜா, கால்நடை துறை மருத்துவர்கள் செந்தில்குமார், பிரசாத், செந்தில் ராஜன், தினேஷ்குமார், மகேஸ்வரி, கவின் குமார் மற்றும் கால்நடை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×