search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5 துணை மின்நிலையங்களில் நாளை மின்தடை
    X

    5 துணை மின்நிலையங்களில் நாளை மின்தடை

    • 5 துணை மின்நிலையங்களில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது

    புதுக்கோட்டை

    திருமயம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், திருமயம், மணவாளங்கரை, இளஞ்சாவூர், ராமச்சந்திரபுரம், கண்ணங்காரைக்குடி, ஊனையூர், சவேரியார் புரம், குளத்துப்பட்டி, பட்டணம், மலைகுடிபட்டி, மாவூர், கோனாபட்டு, துளையானூர், தேத்தாம்பட்டி, ஆதனூர், வாரியப்பட்டி, கொள்ள காட்டுப்பட்டி, ராங்கியம், கண்ணனூர், மேலூர், அம்மன்பட்டி, அரசம்பட்டி, லட்சுமிபுரம், ஏனப்பட்டி, விராச்சிலை, பெல் நிறுவனம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

    குளத்தூர், குன்றாண்டார்கோவில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கீரனூர் பேரூராட்சி பகுதிகள் பரந்தாமன் நகர், கீழகாந்திநகர், மேல காந்தி நகர், நான்கு ரத வீதிகள், எழில் நகர், என்.சி.ஓ. காலனி, முஸ்லிம் தெரு, பஸ் ஸ்டாண்ட், ஜெய்ஹிந்த் நகர், ஹவுசிங் யூனிட், பசுமைநகர், அழகு நகர், செங்களூர், கிள்ளுக்கோட்டை, உலகத்தான்பட்டி, உடையாளிப்பட்டி, ராக்கதாம்பட்டி, ஒடுகம்பட்டி, வாழமங்களம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று கீரனூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜேம்ஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×