search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குடி மேலாத்துாரில் பொங்கல் பரிசு வழங்கும் விழா
    X

    ஆலங்குடி மேலாத்துாரில் பொங்கல் பரிசு வழங்கும் விழா

    • ஆலங்குடி மேலாத்துாரில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது
    • முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பொது மக்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசை வழங்கினார்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலாத்தூர் ஊராட்சி நீர் பாசன சங்கம் சார்பில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.விழாவில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சரும் விராலிமலை தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசை வழங்கினார்.விழாவில் நீர் பாசன சங்க தலைவர் குமார், மேலாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சோபா புஷ்பராஜ், ஆலங்குடி ஊராட்சி மன்ற திருவரங்குளம் முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, கரம்பக்காடு ஜெமீன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குழ.சண்முகநாதன் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×