என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் தின்ற பிளஸ்-2 மாணவர் சாவு
    X

    விஷம் தின்ற பிளஸ்-2 மாணவர் சாவு

    • தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் மனவேதனை
    • விஷம் தின்ற பிளஸ்-2 மாணவர் உயிரிழந்தார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த முகமது அப்பாசின் மகன் முகமது ஹனிப் (வயது 17). இவர் புதுக்கோட்டையில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று எலி மருந்தை தின்றார். அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பப்பட்டார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் முகமது ஹனிப் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அரையாண்டு தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் மனவேதனையில் இருந்த முகமது ஹனிப் விஷத்தை தின்றதாக கூறப்படுகிறது."

    Next Story
    ×