என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகன விபத்தில் முதியவர் பலி
- வாகன விபத்தில் முதியவர் பலினானார்
- கொப்பனாபட்டி ஆலவயல் பிரிவு சாலை அருகே வந்த போது எதிரே வந்த டிப்பர் லாரியும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
பொன்னமராவதி:
புதுக்கோட்டை மாவட்டம் கிளிக்குடி அருகே உள்ள வேப்பங்கனிப்பட்டி கிராமத்தை ேசர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவர் மனைவி வளர்மதி(53) மற்றும் உறவினர் துளசிமணி ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் கிளிக்குடியிலிருந்து பொன்னமராவதிக்கு சென்று கொண்டிருந்தார். இரு சக்கர வாகனத்தை துளசிமணிஒட்டிவந்துள்ளார்.
கொப்பனாபட்டி ஆலவயல் பிரிவு சாலை அருகே வந்த போது எதிரே வந்த டிப்பர் லாரியும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. பலத்த காயமடைந்த சண்முகம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வளர்மதி, துளசிமணி இருவரும் பொன்னமராவதி அரசு பாப்பாயி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டிப்பர் லாரி ஒட்டுனர் ராங்கியம் சந்தோஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






