search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடங்கள்
    X

    கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடங்கள்

    • கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்குரூ.3 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது
    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையின் செயல்பாடுகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்வை யிட்டு ஆய்வு செ ய்தார். மருத்துவமனையின் செயல்பாடுகளை பற்றியும் வசதிகளை பற்றியும் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோச னைகளை வழங்கி னார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    கறம்பக்குடி அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்து 36 படுக்கைகள் கொண்ட தாலுக்கா மருத்து வமனையாக கடந்த 2015 -ம் ஆண்டு மேம்ப டுத்தப்ப ட்டு செயல்ப டுத்த ப்பட்டு வருகிறது. மருத்து வம னையில் படுக்கை வசதிக்கு தான் கூடுதல் கட்டிடம் கட்ட கோரிக்கை வைக்க ப்பட்டது.

    அதன் அடிப்படையில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயும் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2 கோடியும் பெறப்பட்டு 50 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிட வசதிகள் மருத்து வமனைக்கு ஏற்படுத்தி தரநடவடிக்கை மேற்கொள்ளப்படும் மருத்துவர்கள் பணியா ளர்கள் காலிபணியி டங்க ளை நிரப்புவதற்கும் அவர்களு க்கான தங்கும் இடம் கட்டுவதற்கும் நிதிநி லை அறிக்கையில் உரிய நட வடிக்கை மேற்கொ ள்ள ப்படும்.

    மருத்துவமனையில் பிணவறை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்ய அறிவுறுத்த ப்பட்டுள்ளது. எக்ஸ்ரே வசதி ஸ்கேன் கருவி வழங்குவதற்கு நட வடிக்கை மேற்கொ ள்ளப்படும்.

    குறிப்பாக மருத்துவ மனையில் நிரந்தர பணியி டங்களை மூன்று மாதத்தி ற்குள் ஏற்படுத்தித் தந்து அரசாணை வெளியி டப்படும். இதன் மூலம் கரம்பக்குடி பகுதி மக்களின் நீண்ட நாள் மருத்துவ வசதி கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று அவர் கூறினார். இந்த ஆய்வி ன்போது மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா கந்தர்வ கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சின்னத்து ரை வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே கே செல்ல பாண்டியன் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் அறந்தாங்கி மருத்துவத் துறை துணை இயக்குனர் நமச்சிவாயன் புதுக்கோட்டை மருத்துவத் துறை துணை இயக்குனர் ராம் கணேஷ் கரம்பக்குடி வட்டார மருத்துவ அலுவலர் பஜ்ருல் அகமது கரம்பக்குடி பேரூராட்சி தலைவரும் திமுக நகர செயலாளருமான முருகேசன் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பாஞ்சாலன் ஒன்றிய குழு தலைவர் மாலா ராஜேந்திர துரை ஆத்மா சேர்மன் முத்துகிருஷ்ணன் மற்றும் வருவாய் துறை மருத்துவத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×