என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம்
    X

    தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம்

    • தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது
    • சாலை மறியல் போராட்டம் ரத்து

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதியில் இருந்து வேகுப்பட்டி காட்டுப்பட்டி வழியாக பர்மிட் உள்ள அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஊருக்குள் வராமல் இருப்பதை கண்டித்து, இன்று காட்டுப்பட்டி விலக்கு ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற இருந்தது. இதனை அறிந்த பொன்னமராவதி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பழனிச்சாமி, அவர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது.இதில் வேகுப்பட்டி காட்டுப்பட்டி வழியாக பர்மிட் உள்ள பஸ்கள் வழக்கம்போல இயக்கப்படும் என உறுதி கூறியதன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர்.வட்டார போக்குவரத்து நேர்முக உதவியாளர் நடராஜன், துணை தாகில்தார் திலகம், புதுக்கோட்டை அரசு போக்குவரத்து வணிக பொது மேலாளர் சுப்பு, கிளை மேலாளர் அருண்குமார், பொன்னமராவதி எஸ்.ஐ. முத்து, வேகுப்பட்டி ஊராட்சி தலைவர் அர்ச்சுணன், காட்டுப்பட்டி ஊராட்சி தலைவர் அழகி, ஊராட்சி துணைத் தலைவர் முத்து, பொன்னமராவதி ஆர்.ஐ வேளாங்கண்ணி, விஏஓ ஜெயந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×