search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாடியம்மன் கோவில் மது எடுப்பு விழா
    X

    நாடியம்மன் கோவில் மது எடுப்பு விழா

    • நாடியம்மன் கோவில் மது எடுப்பு விழா நடைபெற்றது
    • ஆடி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூரில் அருள் பாலித்து வரும் நாடியம்மனுக்கு மது எடுப்பு திருவிழா நடைபெற்றது. ஆடி திருவிழாவை முன்னிட்டு நாடியம்மனுக்கு பூச்சொறிதல் கடந்த வாரம் நடைபெற்றது. தொடர்ந்து காப்பு கட்டுதலும் மண்டக படிகளும் நடைபெற்றன. தொடரந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மது எடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், மது எடுப்பு விழா நடைபெற்றது. இதில் பெண்கள் அலங்கரிக்கப்பட்ட குடங்களில் நெல் மணிகளை போட்டு அதில் தென்னம்பாளைகளை வைத்து அதனை தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக நாடியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் மூன்று முறை கோவிலை சுற்றி வந்து தென்ம்பாளைகள் மற்றும் நெல் மணிகளை கோவிலில் கொட்டி அம்மனை வழிபட்டு சென்றனர். அதில் கீழாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் பூசாரி அம்மனுக்கு மகா தீபாராதனை செய்து மது குடங்களுக்கும் அபிஷேகம் செய்தார்.ஆலங்குடி மற்றும் வடகாடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×