என் மலர்
உள்ளூர் செய்திகள்

கம்பன் பெருவிழா
- கம்பன் பெருவிழா நடைபெற உள்ளது.
- வரும் 15-ந் தேதி முதல் 10 நாட்கள் நடைபெறுகிறது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் நகர் மன்ற வளாகத்தில் வருகிற 15-ந் தேதி முதல் 24 -ந் தேதி வரை 10 நாட்கள் கம்பன் கழகம் 47ஆம் ஆண்டு கம்பன் பெருவிழாவை நடத்துகிறது. இதுகுறித்து கம்பன் கழக செயலகத்தில் கம்பன் கழக தலைவரும் தொழிலதிபருமான ச.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது,
கம்பன் கழகம் 47ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா வருகின்ற 15ம் தேதி முதல் 10 நாட்கள் தினந்தோறும் மாலை 5.30 மணியிலிருந்து நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. இதில் மகளிர் அரங்கம், தமிழிசை அரங்கம், கவியரங்கம், உரைக்களம், வழக்காடு மன்றம், நடன அரங்கம், உரை அரங்கம், தேனிசை அரங்கம், எழிலுரை, நற்றமிழ் முற்றம், கவிதைச் சோலை, கனல் உரை, இளையோர் அரங்கம், ஐயம் தெளிவு அரங்கம், பரிசளிப்பு, பல்பணி அரங்கம், பட்டிமன்றம் ஆகியவை நடைப்பெறுகிறது.
விழாவில் உச்சநீதிமன்றம் நீதியரசர் ராமசுப்பிரமணியன், உயர்நீதிமன்றம் நீதியரசர் சுரேஷ்குமார், கலந்துக் கொண்டு கம்பன் மாமணி, இலக்கிய மாமணி, கம்பன் பணி விருதுகளை வழங்குகின்றர். நிறைவு விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சோரி ஆளுநர் டாக்டர தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துக் கொண்டு சிறப்பிக்கிறார். டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி கம்பனின் சொல் நயம் எனும் பொருளில் எழிலுரையாற்றுகிறார். மேலும் தமிழக அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் அமைச்சர் பெருமக்கள் என கலந்துக் கொண்டு சிறப்பிக்க உள்ளனர். எனவே 10 நாட்களும் ஆன்றோர், சான்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டும். தமிழகமே திரும்பி பார்க்கும்படி விழா நடத்தப்படும் என்றார். மேலும் 50வது ஆண்டு விழா சிறப்பாக நடத்தப்படும் என்றார். பேட்டியின் போது செயலாளர் சம்பத்குமார் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.






