search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகைக்கடை அதிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2.5 லட்சம், 7 பவுன் நகை பறிப்பு
    X

    நகைக்கடை அதிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2.5 லட்சம், 7 பவுன் நகை பறிப்பு

    • நகைக்கடை அதிபரை மிரட்டி பணம், நகைகளை பறித்து சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
    • இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் அருண் குமாரை வழிமறித்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் காட்டுபாவா பள்ளிவாசல் கீழக்குடி பற்றி பகுதியை சேர்ந்தவர் அருண் குமார் (வயது 30) இவர் கீழசெவல்பட்டி யில் நகை கடை நடத்தி வருகிறார்.

    பின்னர் தனது உறவினர் சுப்பிரமணியன் என்பவருடன் தனித்தனியாக இரு சக்கர வாகனங்களில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பில்லமங்கலம் சுடுகாடு அருகே வந்தபோது அவர்களை பின் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் அருண் குமாரை வழிமறித்தனர்.

    பின்னர் அரிவாளை காட்டி மிரட்டி 2.60 லட்சம் பணத்தையும், ஆறே முக்கால் பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அருண்குமார் திருமயம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் சப்-இன்ஸ்பெக்டர் அனந்தராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×