search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளத்தின் வரத்து வாரி ஆக்கிரமிப்பு அகற்றம்
    X

    குளத்தின் வரத்து வாரி ஆக்கிரமிப்பு அகற்றம்

    • குளத்தின் வரத்து வாரி ஆக்கிரமிப்பு அகற்றம்
    • ஊராட்சிமன்ற தலைவர் மனு கொடுத்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டைவிடுதி ஊராட்சி கும்மங்குளத்தில் தனி நபர் ஒருவர் குளத்து வரத்து வாரியை ஆக்கிரமிப்பு செய்ததாக, ஊராட்சிமன்ற தலைவர் அகஸ்டின், தாசில்தார் செந்தில் நாயகியிடம் புகார் மனு கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிரு ந்த வரத்து வாரியை அகற்றினர்.

    கும்மங்குளத்தில் உள்ள வரத்து வாரி அக்கிராமத்தில் உள்ள தனிந பர் ஒருவர் வீட்டின் அருகில் உள்ள வரத்து வாரிகளை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர் இந்த ஆக்கிரமிப்பு பல ஆண்டுகளாக நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் போலீசார் மற்றும் புதுக்கோட்டைவிடுதி கிராம நிர் வாக அலுவலர்கள் வீரமுத்து, மாரீஸ்வரன் மற்றும் ஆலங்குடி வரு வாய் ஆய்வாளர் துரைக்கண்ணு மண்டல வட்ட துணை தாசில்தார் பழனியப்பன் கிராம மக்கள் முன்னிலையில் வரத்து வாரி மரங்கள் மற்றும் செடி கொடிகளை அகற்றி தூய்மை செய்தனர்.

    Next Story
    ×